Wednesday, May 30, 2012

வேரென நீயிருந்தாய்...(55)


20 Decempber 2002, வெள்ளிக்கிழமை மாலை. திட்டமிட்டிருந்ததிலும் சற்று நேரம் கழித்தே வீட்டிற்கு வரமுடிந்தது. வீட்டிற்கு வர நதீஷா ஆயத்தமாயிருந்தாள்.

“கெதியாப் போகவேணுமப்பா. இல்லையெண்டாப் பிறகு check point-ஐ மூடிருவாங்கள்.”

“ஓமப்பா கடைசி நேரத்தில meeting ஒண்டைப் போட்டுத் துலைச்சிற்றாங்கள். அதுதான் லேற்றாகீற்றுது. இனி ஓமந்தை bus கிடைக்குமோ தெரியாது. நாங்கள் motor cycle-இலயே வவுனியா வரைக்கும் போவம். நான் ஒருக்கா முகத்தை அலம்பீற்று ஓடியாறன். நீர் எல்லாத்தையும் ready பண்ணும். என?”

முகம் அலம்பி வர தயாராக அளவான சூட்டுடன் இருந்த தேனீரை அருந்திவிட்டு இருவருமே கிளம்பினோம்.

முறிகண்டிப் பிள்ளையாருக்கு கற்பூரம் ஏற்றிவிட்டு உந்துருளியை விரைவாகச் செலுத்தியவாறே சென்று கொண்டிருந்தேன்.

“ஏனப்பா முன்னால வாறவங்கள் head light அடிச்சுக் காட்டுறாங்கள்?”

“ஓ! நான் கவனிக்கேல்லை.”

எட்டி எனது உந்துருளியின் முகப்பு விளக்கிற்கு (head light) முன்னதாக ஒரு கையை வைத்துப் பார்த்தேன். எனது உந்துருளியின் முகப்பு விளக்கு எரியவில்லை. பிறகு எதற்காக இந்த சமிக்ஞை கொடுத்திருப்பார்கள்? எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த உந்துருளி தனது வேகத்தைக்குறைத்துக் கொள்ள நான் அதை முந்தியிருந்தேன். எதிரே வந்த வளைவினில் திரும்ப, சற்றுத் தூரத்தில் வெண்ணிற மேற்சட்டையும் நீலநிற காற்சட்டையும் அணிந்திருந்த இரு காவற்றுறையினர் எம்மை வழிமறித்தனர்.

“oh shit! over speed-இல வந்திற்றம் நதீஷா. அதுதான் முன்னால வந்தவங்கள் signal போட்டுக் காட்டியிருக்கிறாங்கள். எங்களுக்கு தான் விளங்கேல்லை.”

உந்துருளியை அவர்களின் அருகே நிறுத்தினேன். அவர்கள் சிரித்துக்கொண்டே வேகமானியின் வாசிப்பினை என்னிடம் காட்டினார்கள். தண்டப்பணம் இருநுாறு ரூபாவிற்கான பற்றுச்சீட்டினைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தோம்.

“நீங்க அவையோட கதைச்சுப் பார்த்திருக்கலாமப்பா. சும்மா ஒண்டும் கதைக்காம காசைக்குடுத்திற்று வாறீங்கள்”

“இல்லை நதீஷா. இவங்களோட கதைக்கேலாது. ஏனெண்டா எங்களிலதான் பிழை. சும்மா கதைச்சுக் கொண்டு நிண்டா நேரம் தான் போகும். ஒரு பிரியோசனமும் கிடைக்காது. பாருங்க அவங்கள் சிரிச்சுக் கொண்டுதானே நிக்கிறாங்கள். ஆனாலும் fine கட்டாமப் போக விடமாட்டாங்கள் இதே ஓமந்தைக்கு அங்காலையெண்டா முறைச்சுக் கொண்டு நிப்பாங்கள். ஆனா அம்பதோ (ஐம்பதோ) நூறோ குடுத்திற்றா விட்டிருவாங்கள்”

ஒருவாறாக எல்லைச் சோதனைச் சாவடிகள் மூடப்படுவதற்குள்ளாக ஓமந்தையைக் கடந்து விட்டிருந்தோம். வவுனியா நியாப்பில் வேலைசெய்யும் பொறியியலாளர்களின் குடியிருப்பில் உந்துருளியை விட்டுவிட்டு வந்தோம். 

“இனி கண்டிக்கு direct bus இருக்காது. வாங்க அநுராதபுரம் போய்ப் போவம்.”

அநுராதபுரத்தினை அடைந்து அங்கிருந்து கண்டிக்குப் பயணமாகி கட்டுகஸ்தோட்டையை அடைகையில் நேரம் இரவு 11.30 ஐத் தாண்டி விட்டிருந்தது.

மறுநாள் காலையில் கண்டி நகருக்குச் சென்று எங்கள் பட்டமளிப்பு விழாவிற்குத் தேவையான ஆடைகளைத் தைக்கக் கொடுத்துவிட்டு வந்தோம்.

“நாளைக்கு நாங்க ஒருக்கா டொக்ரரிட்டைப் போவமாப்பா?”

நெஞ்சுக்குள் திக்கென்றாலும் அதை மறைத்துக் கொண்டு,

“ஏன்? என்னத்துக்கு?”

“இல்ல... எனக்கு பீரியட்ஸ் பிந்தி ஒருகிழமையாகிற்றுது. அதுதான் ஒருக்கா டொக்ரரிட்டைப் போய்ச் செக் பண்ணீற்று வருவம்.”

“சரி உம்மட விருப்பம்”

“அப்ப நான் டொக்ரரிட்டை இண்டைக்கே book பண்ணுறன் என?”

“ஓம்”

“என்ன நீங்க? ஏன் ஒருமாதிரி டல்லா இருக்கிறீங்க?”

“சீ! எனக்கொண்டுமில்லை. நேற்று முழுக்க அலைஞ்சதுதானே. அதுதான் tired-ஆ இருக்கு”

“அப்ப நீங்க சாப்பிட்டிட்டுப் படுங்கோ. நான் பிறகு எழுப்பிறன்”

மாலை வைத்தியரின் அறையில் இருந்தோம். நதீஷாவின சிறுநீர் மாதிரியைப் பரிசோதித்து விட்டு,

“Congratulations! It's positive”

நதீஷாவின் முகம் சந்தோஷம், பெருமிதம், பரவசம் எல்லாம் கலந்து காட்சியளித்தது.

வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டு, நதீஷாவிற்காக படுக்கையில் காத்திருந்தேன்

“என்ன நீங்க? காலமையிலயிருந்து பார்க்கிறன். ஏன் ஒருமாதிரி இருக்கிறீங்க?”

“இல்லையே.. நான் நல்லாத்தானே இருக்கிறன்”

“பொய் சொல்லாதீங்க. உங்களுக்கு இப்ப குழந்தைவாறது பிடிக்கேல்லையா?”

“என்ன நீங்க? ஏன் இப்பிடியெல்லாம் கதைக்கிறீங்க? ஏன் நானும் சந்தோஷமாத்தானே இருக்கிறன்”

“இல்லை. டொக்ரர் positive எண்டு சொல்லேக்குள்ள உங்கட முகம் ஒருமாதிரிப் போய்ற்றுது. நான் கவனிச்சனான்”

“நீங்க சும்மா குழப்புறீங்க”

“நீங்கதான் மழுப்புறீங்க. உண்மையைச் சொல்லுங்க. உங்களுக்கு என்ன பிரச்சினை? please...”

மாவீரர் நாள் இரவு வந்து மனதில் உறுத்தியது. அன்றைக்குத்தான் கர்ப்பம் தரித்திருக்குமோ? அன்றைய அந்த நிகழ்வு முடிகையில் என் சுவாசநாடி 'ஈதா'வாகவுமில்லாமல் 'பிங்காளா'வாகவுமில்லாமல் சமச்சீராக இருந்ததே. சாத்திரங்களில் சொல்லப்படுவது உண்மையானால் இந்தக்கரு ஆணுமன்றி பெண்ணுமன்றியல்லவா இருக்கும். இதை எப்படி இவளிடம் சொல்வது? கடவுளே சாத்திரங்கள் பொய்யானதாக இருந்துவிட வேண்டும். கர்ப்பிணியாய் இருக்கும் இவளைக் கவலைப்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு. முகத்தில் சிரிப்பினைத் தவழவிட்டேன்.

“சரி உண்மையைச் சொல்லுறனே. டொக்ரர் positive எண்டு சொன்ன உடனே எனக்குப் பயம் வந்திற்றுது. வரேக்குள்ளை ரெண்டுபேரும் motor cycle-இலதானே வந்தம். அது ஏதும் affect பண்ணுமோ எண்டுதான் யோசிச்சுக் கொண்டிருந்தன்”

“சரியான லூசப்பா நீங்க. அதெல்லாம் ஒண்டும் affect பண்ணாது.”

“எண்டாலும் இனி நீர் கவனமாயிருக்க வேணும். கண்டபாட்டுக்கெல்லாம் இனி வேலைசெய்யக்கூடாது”

“அய் பெண்டாட்டியில இவ்வளவு நாளும் இல்லாத பாசம் இப்ப பிள்ளை வருகுதெண்ட உடனே பொத்துக் கொண்டு வருகுது போல”

“ம்ம்ம். அப்பிடியெண்டே வைச்சுக்கொள்ளுமன்”

“பார்ப்பம் பார்ப்பம் வாற பெடியன் அப்பருக்கு எப்பிடியெல்லாம் அலுப்படிக்கிறான் எண்டு”

“என்னெண்டு சொல்லுவீர் இது பெடியனெண்டு? நான் சொல்லுறன் இது பெடியனில்லை” - நாக்கைக் கடித்துக் கொண்டேன்.

“ஏன் கவலைப்படுகிறீங்க? இன்னும் மூண்டு மாசத்தில scan பண்ணினா தெரிஞ்சிரும் தானே?”

“உமக்கு அப்பிடி scan பண்ணிப் பார்க்க விருப்பமா?”

“ஏன் உங்களுக்கு விருப்பமா?”

“எனக்கு விருப்பமில்லை”

“எனக்கும்தான். ஆம்பிளைப்பிள்ளையெண்டான்ன பெம்பிளைப்பிள்ளையெண்டான்ன இது எங்கட பிள்ளை. அது வெளியில வரேக்கை பார்க்கலாம். அப்பத்தான் அதில கூடத் திரில்லிங்கா இருக்கும்”

“Thanks நதீஷா! என்ன பிள்ளையெண்டாலும் அது எங்கட பிள்ளை. ஆனபடியா அது எப்பிடியிருந்தாலும் நாங்க சந்தோஷமா அதை வளர்க்க வேணும். சரியா”

“அதிலயென்ன சந்தேகம் உங்களுக்கு”

“சரி அப்ப வாங்கோ. நான் எங்கடை பிள்ளையைக் கொஞ்ச வேணும்”

“ஆ! ஆசைதான். அதெல்லாம் இப்ப செய்யேலாது”

“நான் பிள்ளையைக் கொஞ்சப்போறன் எண்டுதானே சொன்னனான். வேறையேதுஞ் செய்யப்போறனெண்டு சொல்லேல்லையே”

“வேறையொண்டும் செய்யாமத்தான் இப்ப பிள்ளை வந்ததோ?”

“அட கள்ளி!”

***********

26 December 2002 எங்களுக்கான பட்டமளிப்புவிழா நாள். காலையிலேயே பல்கலைக்கழக வளாகமெங்கும் களைகட்டியிருந்தது. நீண்ட காலத்தின் பின்னர் முதல்தடவையாக வடபகுதியிலிருந்தும் மாணவர்களின் உறவினர்கள் தரைமார்க்கமாக பேராதனைக்கு வரக்கூடியதாக இருந்ததால் பெருமளவிலான தமிர்களும் அங்கே வந்திருந்தனர். குழுக்களாகப் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தவர்களை அணிவகுத்துவரச் சொன்னார்கள். அக்பர் பாலத்தின் கீழாக, இலங்கையின் மிகநீண்ட நதியான மகாவலி நதியினருகாகச் செல்லும் லவ்வர்ஸ் லேன்-ஊடாக எங்கள் அணிவகுப்பு நகர்ந்து கொண்டிருந்தது. இங்கேயும் எங்கள் பதிவிலக்கத்தின் படியே நானும் நதீஷாவும் அருகருகே, 

“நதீஷா! .இப்பத்தான் லவ்வேர்ஸ் லேனுக்குள்ள ரெண்டுபேரும் வாறம் என”

“என்ன செய்யிறது? நீங்க துணிச்சல் உள்ள ஆம்பிளையா இருந்திருந்தா, நாங்க எப்பவோ வந்திருக்கலாம்”

“சொல்லுவீங்கடா! Engagement முடிஞ்சாப்பிறகு ஒருநாள் போவமோ எண்டு கேட்டதுக்கு, டீசன்ற் இல்லை எண்டு சொல்லிப்போட்டு இப்ப இப்பிடிச் சொல்லும்”

“அது அண்டைக்கு. நீங்க அடுத்த நாளும் கேட்டிருக்கலாம் தானே. உங்களுக்கும் பயம் பிறகு கதைக்கிறீங்க. ஆனா பாத்தீங்களா எங்கட பிள்ளை எவ்வளவு துணிச்சல்காரனெண்டு? வயித்திலயிருந்து வெளிய வாறதுக்கு முதலிலேயே அவன் லவ்வர்ஸ் லேனுக்குள்ள வந்திற்றான்.”

“உங்களை.....”

“என்ன உங்களை?”

“வேண்டாம் சும்மா இருங்கோ. பக்கத்திலையெல்லாம் ஆக்கள் இருக்கினம்”

“பக்கத்திலை ஆக்கள் இருக்கேக்குள்ளை சும்மா இருக்கச் சொல்லுறீங்கள். அறிவில்லை?”

“அம்மா தாயே ஆளை விடுங்கோ. ஒழுங்கா convocation-ஐ முடிச்சிற்று வீட்ட போய்ச் சேருவம்”.




பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50 பாகம்-51 பாகம்-52 பாகம்-53 பாகம்-54

Friday, May 18, 2012

வேரென நீயிருந்தாய்... (54)

2002 ஒக்ரோபர் 24, வியாழக்கிழமை. எங்கள் மணவாழ்க்கையின் 6ஆம் மாத நிறைவினை ஒட்டி வேலைக்கு விடுமுறை எடுத்து கண்டிக்கு நதீஷாவின வீட்டிற்குச் சென்றிருந்தோம். அன்றைய இரவு,

“இஞ்சேருங்கப்பா! நான் ஒண்டு சொல்லுவன் நீங்க கோபிக்கக்கூடாது”

“என்னெண்டு சொல்லுமன்”

“இல்லை நாங்க நாளைக்கு ஒருக்கா டொக்ரரிடை்டைப் போவமே?”

“நீர் திருந்த மாட்டீர்”

“இல்லையப்பா டொக்டரிட்டைப் போய் என்ன பிரச்சினையா என்னெண்டு தெரிஞ்சுதெண்டா நிம்மதியா இருக்கலாம் தானே. இப்ப IVF எல்லாம் இஞ்சையும் வந்திற்றுதாம் எண்டு கேள்விப்பட்டன்”

“என்ன சொன்னாலும் நீர் கேட்கப்போறேல்ல. சரி உம்மட விருப்பம்.”

“உண்மையாவா? அப்ப நாளைக்கு நான் appointment-ஐக் confirm பண்ணவா?”

“ஓ appointment எல்லாம் எடுத்திற்றீரா? இது எப்ப நடந்தது?”

“நான் என்ரை friend ஒருத்தியிட்ட அங்கையிருந்தே phone பண்ணி arrange பண்ணின்னான்”.

“ம்ம்ம். நீர் இவ்வளவு அவசரப்படுற படியா நாளைக்குப் போவம். ஆனா பாரும் டொக்ரர் ஒரு பிரச்சனையும் இல்லையெண்டுதான் சொல்லுவேர்.”

மறுநாள் மருத்துவரின் அலுவலகத்தில் எல்லா சோதனைகளுக்கும் எங்களை உட்படுத்திக் கொண்டோம். ஞாயிற்றுக்கிழமை வந்து முடிவுகளைப் பெற்றுக் கொள்ளச் சொன்னதால் ஞாயிறு காலை அவரிடம் சென்றிருந்தோம்.

“Nothing to worry. Both of you are OK."

“Then why doctor? It's already 6 months, but I didn't conceive yet.”

“It may be due to stress. Are both of you happy in your married life?"

“Yes! of course”

“I think either both or one of you are under stress during your intercourse. For some people it happens. Any way as both of you are young enough you can wait for another 6 months. I can advice you to take a 1 week trip to go some nice places as honeymoon to enjoy the life without any stress”

வீட்டினை அடைந்தோம். நதீஷா இப்போது சந்தோஷமாக இருந்தாள்.

“சொன்னன் தானே எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையெண்டு”

“எனக்கு ஒரு உண்மை சொல்லுவீங்களா?”

“என்ன?”

“உங்களுக்கு இந்த life, stress ஆவா இருக்கு?”

“என்ன நீங்க? நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கிறன்”

“அப்ப டொக்ரர் சொன்னேர்.”

“அவர் என்னையா சொன்னவர்? நான் நினைச்சன் உங்களுக்குத்தான் stress என்று”

“நீங்க என்ன லூசா? எனக்கென்ன stress? நான் எவ்வளவு சந்தோஷமா உங்களோட இருக்கிறன். இது என்ரை dream life”

“சரி அப்ப விட்டிட்டு relax இருங்கோ. சும்மா கவலைப்பட்டுக் கொண்டிருக்காம ஏதாவது வேலைக்கு apply பண்ணுங்கோ”

2002 நவம்பர் இறுதி வாரம். சமாதானம் வந்ததன் பின்னான முதலாவது மாவீரர் வாரம் ஆரம்பித்து விட்டிருந்தது. 26 ஆம் திகதி இரவு நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க மாவீரர் துயிலும் இல்லத்திற்கு என்னையும் அழைத்துக் கொண்டு விரைந்தாள் நதீஷா.

துயிலுமில்லம் முழுவதும் கனத்த இதயங்களுடன் மக்கள் நிரம்பி வழிந்தனர்.

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழர்கள்
உறவினர் வந்துள்ளோம்.

அக்காவைப் போன்றவர்களுக்கான பொதுவிடத்தில் அஞ்சலி செலுத்த நின்றவர்களுடன் இணைந்து கொண்டோம். நெஞ்சு பனிக்க கண்ணீர் உகுக்க உருகி நின்றோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.

வீட்டினை அடைகையில் அக்காவின் நினைவுகள் அலைமோதின. இதோ அக்காவிற்காக என்னுடன் வந்து இவளும் அஞ்சலி செலுத்தியிருக்கிறாள். ஆனால் அவளது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட இவள் தந்தையைப் பற்றி என்றைக்கேனும் நான் சிந்தித்துப் பார்த்திருக்கின்றேனா? சிறிலங்காவின் காவல் துறையில் இருந்தாலும் அவர் யாரேனும் தமிழர்களைக் கொன்றதாகவோ கொடுமைப் படுத்தியதாகவோ இல்லையே. படையிலிருந்த அவளது அண்ணனைப் போல் அவரைக் கருத முடியாதே. இன்றைய தினத்தில் அவருக்கும் அஞ்சலி செய்வதுதான் முறையாக இருக்கும். இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒன்றும் தப்பல்ல. அதுதான் மனிதத்தன்மை. அவலச்சாவில் இறந்தவர்களின் ஆத்மாக்கள் சாந்தியடையாமல் அலைந்து கொண்டேயிருக்குமாம். அந்த ஆத்மாக்களை நினைவுகூர்ந்து அவை சாந்தியடைவதற்குரிய செயல்களைச் செய்யவேண்டியது உயிருள்ள மனிதர்களின் கடமை. தன் தந்தையைக் கொன்றவளுக்கே வந்து அஞ்சலி செலுத்தும் நதீஷா எங்கே? நான் எங்கே?

வீட்டினை அடைந்து முதலில் நான் குளித்துவிட்டு வர நதீஷா குளிக்கச் சென்றாள். அவள் வந்ததும் .அவள் கண்களை மூடி அவளை சாமியறைக்கு அழைத்துச் சென்று கண்களை விடுவித்தேன். அதிர்ச்சியடைந்தவள் கண்களினின்றும் கண்ணீர் பெருக்கெடுக்க,

“மகே தாத்தே...”  கேவினாள்.

அவளை ஆதுரத்துடன் தாங்கிக்கொண்டேன். என்னில் சாய்ந்து கொண்டாள். அக்காவினதும் அவள் தந்தையினதும் படங்கள் அருகருகே வைக்கப்பட்டு விளக்கேற்ப்பட்டிருக்க இருவரும் இணைந்து அவர்கள் இருவருக்குமாய் எங்களின் அஞ்சலியைத் செலுத்தி விட்டு படுக்கையறைக்குள் நுழைந்தோம்.

“Thanks-ங்க thank you so much-ங்க. இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்குத் தெரியுமா?”

“ஓ!” புன்னகைத்துக் கொண்டேன்.

“என்னடா சும்மா ஓ எண்டு மட்டும் சொல்லிப்போட்டு நிக்கிற?”

“ஆ! என்ன எடா புடா எண்டு வாய் நீளுது?”

“அதுக்கு இப்ப என்னடா செய்யப் போற?”

“எனக்கும் நீளும்”

“ஓ..ஓ!”

“இல்லை. நான் உண்மையாக் கையைத்தான் சொன்னான்”

“ஆ! ச்சீ! போடா கள்ளா. உன்னை”

அவள் என்றுமில்லாதவாறு மிகுந்த சந்தோஷத்துடனும் கிளர்ச்சியுடனும் இருப்பது புரிந்தது.

அல்லி மலர்வது இரவு நேரத்தில
மல்லி மலர்வது மாலை நேரத்தில
பெண்மை மலர்வது எந்த நேரத்தில
என்று கணடு பிடிச்சு...

“என்ன உன்னை எண்டிட்டு நிப்பாட்டீற்றீர்?”

“ஏன் ஐயாக்கு கட்டாயம் மிச்சத்தையும் சொல்ல வேணுமாமோ?

”ஓம்”

“சொல்லாட்டி என்ன செய்வேராம்”

“அடிப்பேராம்.”

“ஏலுமெண்டா அடிக்கட்டும் பார்ப்பம்”

எட்ட, அவள் விலக சறுக்கி இருவருமாய்க் கட்டிலில் விழுந்தோம். கைபற்றினேன். சிலிர்த்தாள் சிணுங்கினாள். அன்றைய தீண்டலில் புதிதாய்த் தெரிந்தாள். அனைத்துமே புதிதாய் நீண்டு சென்ற இரவில் உறவும் நீள  பரவசமாய் பரமசுகம். தந்ராவின் நாற்புள்ளி, முப்புள்ளி நிலைகள் தாண்டி சக்கர நிலையை அடைந்ததாய்... பரமானந்த நிலை தொடர... அந்த அற்புத தருணங்களில் அக்காவும் நதீஷாவின் அப்பாவும் மாறிமாறி வந்து போக, ஓஷோவின் காமத்தினூடாக கடவுளைக் காணுதல் இதுதானோ?

ஒருமடமாது ஒருவனுமாகி
இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணிதம் மீது கலந்து..
பனியிலோர் பாதி சிறுதுளி மாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு...

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆண்டாண்டுகாலமாய்த் தொடர்ந்துவரும் துவந்த யுத்தம் முடிவடைய பெருக்கெடுத்திருந்த வியர்வை வெள்ளமாய் ஓட, சட்டென நினைவு வந்தவனாய் மூச்சுக்காற்றினை உற்றுப் பார்த்தேன். அது 'ஈதா'-வும் 'பிங்காளா'-வுமாயும் .இல்லாமல் இடது மூச்சும் வலதும் மூச்சும் சமமாய் இருக்க நெஞ்சுக்குள் திக்கென்றது.




பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50 பாகம்-51 பாகம்-52 பாகம்-53

வேரென நீயிருந்தாய்... (53)



2002 ஜுன் இறுதிப்பகுதி, நியாப் திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட பொறியியலாளர்களில் நானும் ஒருவனாய், கிளிநொச்சி மாவட்டத்திற்கு எனக்கான நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டேன். நதீஷாவும் போதனாசிரியர் வேலையை விட்டுவிட்டு என்னுடன் கிளிநொச்சிக்கு வருவதாய் அடம்பிடிக்கவே இருவருமே கிளிநொச்சிக்கு எமது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டோம். ஆரம்ப நாட்களில் எங்கள் மீதான கண்காணிப்பினை உணரக்கூடியதாயிருந்தாலும் நாளடைவில் நாங்களும் கிளிநொச்சிவாசிகளாகி விட்டிருந்தோம். வேலை முடிந்து வந்த நேரம் நதீஷா யோசனையுடன் இருந்தாள்.

“நதீஷா உங்களுக்கு வீட்டில தனிய இருக்கிறது போரடிக்குதெண்டா வேலைக்கு apply பண்ணுங்க. இப்ப UNDP, UNOPS எல்லாம் வேலைக்கு ஆக்களை எடுக்கப்போறதாமெண்டு கதை அடிபடுகுது.”

“நாங்க எங்களுக்கெண்டு ஒரு family-ஐ உருவாக்கிற்று அதுக்குப்பிறகு வேலைக்குப் போறன்”.

“என்ன சொல்லுறீங்க நீங்க? நாங்க இப்ப family-யாத்தானே இருக்கிறம்”

“உங்களுக்கு நான் சொல்லுற family-யின்ரை அர்த்தம் விளங்குதில்லை”

“அப்ப விளக்கமாச் சொல்லுங்கவன்”

“முதலில என்ன நீங்க எண்டு போட்டுக் கதைக்கிறதை நிப்பாட்டுறீங்களா?”

“ஏன்? ஏன் திடீரெண்டு அப்பிடிச் சொல்லுறீங்க”

“நான் இஞ்சையிருக்கிற மற்றாக்களை வடிவா note பண்ணின்னான். அவையெல்லாம் தங்கடை மனிசிமாரை நீங்க எண்டா கூப்பிடுகினம்”

“இப்ப என்ன சொல்லவாறீங்க நீங்க?”

“என்னப்பா நீங்க? இதுகூட விளங்காம?”

“விளங்காமத்தானே கேக்கிறன்”

“விளங்காட்டிப் போய் விளக்குமாத்தை எடுத்து முத்தத்தைக் கூட்டுங்கோ விளங்கும்”

“ஓ! முத்தத்தைக் கூட்டச் சொல்லுறீங்களோ! இப்ப விளங்குது மகாராணியார் என்னத்தைச் சொலலுறா எண்டு. இரவு வரட்டும்”

“என்ன நீங்க? ஒருமாதிரிக் கதைக்கிறீங்? இதில ஏதோ double meaning இருக்குப் போல”

“ஓ அப்பிடியா. நான் single meaning-இல தான் சொன்னனான்.”

“ஐயோ! நீங்க கதையை மாத்தீற்றீங்க. நான் சொன்னனான் என்ன நீங்க எண்டு சொல்லதீங்க. மற்றப் பொம்பிளைகளின்ரை புருஷன்மாரெல்லாம் நீங்க போட்டா அவையோட கதைக்கினம். உரிமையா நீ எண்டு சொல்லித்தானே கதைக்கினம்”

“ஐயோ கடவுளே! என்னையும் அவையை மாதிரி மரியாதையில்லாமலா கதைக்கச் சொல்லுறீங்க”

“உங்களுக்குத்தான் ஒண்டும் விளங்குதில்லை. நீயெண்டு சொல்லி நீங்க என்னோட கதைச்சா இன்னும் கூட close ஆ இருக்கும். அதை விட்டிட்டு இப்பவும் campus இல கதைச்சமாதிரி நீங்க எண்டு கதைச்சா ஒரு கிக் இல்லாம இருக்கு”

“ஓ! அம்மாவுக்கு இப்ப கிக் தேவைப்படுகுதோ”

“இஞ்சேருங்கோ! நான் சொல்லுறது உங்களுக்கு விளங்குதில்லை பாருங்கோ.”

“ஆகா! typical தமிழ் பொம்பிளையளாட்டம்.”

“அப்ப இப்ப விளங்குதேங்கோ? என்னை இனி நீங்க எண்டு கூப்பிடாதேங்கோப்பா”

“சரிசரி அப்ப இனிநான் உங்களை நீர் எண்டு கூப்பிடுறன்”

“பிறகும் பாருங்கோவன்.”

“நீர் என்னப்பா? விடமாட்டீர் போல”

“ஆ! இது! இப்பிடி நீங்க சொல்லுறதைக் கேக்க இன்னும் கூட romance-ஆ இருக்கு”

“அப்ப இண்டைக்கு இரவு நல்ல விருந்து போல”

“அப்ப இவ்வளவு நாளும் இல்லையோ?”

“சரிசரி விடுங்க. sorry! விடும். இரவைக்குப் பாக்கலாம்.”

“சரி நீங்க போய்க் குளிச்சிற்று வாங்கோ. நான் புட்டவிக்கிறன்.”

இரவுணவினை அருந்திவிட்டு வெளியே வந்து நிலவு வெளிச்சத்தில் முற்றத்தில் அமர்ந்தோம். இளந்தென்றல் இதமாக இருந்தது. நதீஷா இப்போதும் ஏதோ யோசனையுடன் இருப்பதாகவே பட்டது.

“நான் அப்போதே கேக்கவேணுமெண்டு நினைச்சனான். பிறகு கதையில விடபட்டிட்டுது. என்ன ஒரே யோசனையா இருக்கிறீஙக. sorry இருக்கிறீர்?”

“ஒண்டுமில்லை”

“பரவாயில்லைச் சொல்லும்.”

“இல்லை சொன்னா நீங்க எப்பிடி எடுத்துக் கொள்ளுறீங்களோ?”

“என்ன நீர்? இப்பிடியேன் கதைக்கிறீர்?”

அவளருகே சென்றமர்ந்தேன். என் மடியினில் தலைவைத்து சாய்ந்து கொண்டாள். அவள் கூந்தலைக் கிளைந்து விட்டவாறே,

“சொல்லும் நதீஷா! என்னத்துக்கு யோசிக்கிறீர். இஞ்சையிருக்க உங்களுக்குப் பிடிக்கேல்லையா? அப்பிடியெண்டா நாங்க கொழும்புக்குப் போவம்.”

“ஐயோ! நீ்ங்க என்ன கதைக்கிறீங்க?”

“அப்ப என்னத்துக்கு யோசிக்கிறீர்?”

“எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சு எத்தினை நாளாச்சு?”

“என்ன திடீரெண்டு?”

“கேட்டதுக்குப் பதில் சொல்லுங்கவன்”

“ஏப்ரல் 24 இல கல்யாணம் நடந்ததெண்டா இப்ப மே, ஜுன், ஜுலை மூண்டுமாசமாச்சுது. அதுக்கென்ன?”

“இல்லை. நாங்க எல்லாம் சரியாத்தானே செய்யிறம்?”

“என்ன நீங்க? நாங்க என்ன பிழை விட்டனாங்க?”

“இல்லை மூண்டுமாசமாச்சு இன்னும் ஒண்டையும் காணேல்லை”

“என்ன???? அட! இப்ப அதுக்கென்ன அவசரம்?”

“இல்லை நாங்க வேண்டாமெண்டு இருக்கேல்லைத்தானே. அதுதான் யோசனையா இருக்கு. வேணுமெண்டா ஒருக்கா டொக்டரிட்டைப் போய்ப் பார்ப்பமா?”

“உங்களுக்கென்ன விசரா? டொக்டரிட்டைப் போனாலும் அவர் கல்யாணம்கட்டி ஒரு வருஷம் வரைக்கும் பார்க்கச் சொல்லுவேர். நீங்க மூண்டு மாதத்துக்குள்ளயே கவலைப்படுறீங்க.”

“இல்லை எனக்கு எங்கட குழந்தை வேணும்.”

“எங்களுக்கு இப்பத்தான் 26 வயசு. பிறகேன் கவலைப்படுறீங்க?”

“மூண்டு மாசமா ஒண்டையும் காணேல்ல.......”

“சரி உங்களுக்கு ஆம்பிளைப்பிள்ளையா பொம்பிளைப்பிள்ளையா வேணும்?”

“ரெண்டும் வேணும்”

“எது முதல் வேணும்?”

“ஆம்பிளைப்பிள்ளை. உங்களுக்கு?”

“எனக்குப் பெம்பிளைப்பிள்ளைதான் வேணும்”

“ஏன்?”

“எல்லா ஆம்பிளைகளுக்கும் பெம்பளைப்பிள்ளை தான் பிடிக்கும். அதேபோல பெம்பிளைகளுக்க ஆம்பிளைபை் பிள்ளை பிடிக்கும்”

“ஏனப்பிடி? எனக்கு முதலாவதாத்தான் ஆம்பிளைப்பிள்ளை. அடுத்தது பெம்பிளைப்பிள்ளை தான் வேணும்”

“ஆகா! முதலாவதையே இன்னும் காணேல்லை. அதுக்குள்ள ரெண்டாவதுக்கும் போய்ற்றீங்களா?

“ம்ம்ம்...அதுதான் என்னெண்டு தெரியாது. இண்டைக்கு ஒரே பயமாவும் யோசனையாவும் கிடக்கு”

“சரி அப்ப விளக்குமாத்தை எடுத்துக் கொண்டு வாங்க”

“என்ன?”

“சரி விடுங்க. அதை என்னத்துக்கு? முத்தத்தைக் கூட்டுறன். நீங்க எண்ணிக்கொள்ளுங்க. அவ்வளவையும் திருப்பித் தரவேணும் சரியா? எண்ணுங்க ஒண்டு...”

“வேணாம்........” 

அந்த வேணாம் என்பதன் அர்த்தம் இன்னும் வேண்டும் என்பதை இந்த மூன்று மாதகால தாம்பத்திய வாழ்க்கை சொல்லித் தந்திருந்தது.

பொட்டப்புள்ள பெத்துக்கொடு
போதும் என்னை விட்டுவிடு
வெளிச்சம் எரியவிட்டு வெட்கத்தை அணைத்துவிடு




பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19 பாகம்-20 பாகம்-21 பாகம்-22 பாகம்-23 பாகம்-24 பாகம்-25 பாகம்-26 பாகம்-27 பாகம்-28 பாகம்-29 பாகம்-30 பாகம்-31 பாகம்-32 பாகம்-33 பாகம்-34 பாகம்-35 பாகம்-36 பாகம்-37 பாகம்-38 பாகம்-39 பாகம்-40 பாகம்-41 பாகம்-42 பாகம்-43 பாகம்-44 பாகம்-45 பாகம்-46 பாகம்-47 பாகம்-48 பாகம்-49 பாகம்-50   பாகம்-51   பாகம்-52